ஐந்து பெண்கள் உட்பட அறுவர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையல், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறே தோட்டத்திலேயே இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
30,34,35, 40, 42, மற்றும் 47 வயதுகளுடையவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் – செதி பெருமாள்
