மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.
அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன்,...
தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம்
நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று மாலை பதவிப்பிரமாணம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
குழந்தை பிரசவித்த 13 வயது சிறுமி
கண்டி – ரங்கல, டக்வாரி தோட்டத்தில் 13 வயது சிறுமி குழந்தை பிரசவித்தமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாவது சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை...
சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்த மூவர் கைது
சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்திருந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மாகும்புர, மாத்தறை மற்றும் பூகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மாகும்புர பகுதியைச் சேர்ந்தவரிடமிருந்து 1,350 லீற்றர் டீசலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்....
விவசாய அமைச்சின் விசேட அறிவிப்பு
ஜூலை 6ஆம் திகதி தொடக்கம் விவசாய திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்படுவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
யூரியா உரத்தை வினைத்திறனான முறையில் நாடு...
எரிபொருள் வரிசையில் காத்திருந்த 19 வயது இளைஞன் பலி! அநுராதபுரத்தில் சோகம்!!
எரிபொருள் வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளார்.
அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
அநுராதபுரம், பண்டுலுகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு...
‘தமிழக நிவாரணம்’ – ‘அவசர கடிதம்’ எழுதினார் அரவிந்தகுமார்
பதுளை பிரதேச செயலக பிரிவில் அனைத்து பெருந்தோட்டப்பிரிவு மக்களுக்கும் இந்திய- தமிழக நிவாரண உதவிகளை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ. அரவிந்தகுமார் கேட்டுள்ளார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற...
ஆஸி. செல்ல முற்பட்ட 35 பேர் கைது – நுவரெலியாவாசியும் சிக்கினார்!
இலங்கையில் மேற்குக் கடற்பகுதியில், படகு மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 35 பேரைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
அவர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடி இழுவைப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாணந்துறை கடற்பகுதியில் நேற்று மாலை கடற்படையினர்...
எரிபொருள் தட்டுப்பாடு – மீண்டும் சவாரியை ஆரம்பித்தது குதிரை வண்டி
எரிபொருள் தட்டுப்பாட்டால், பலர் சைக்கிளை பயன்படுத்திவரும் நிலையில், தற்போது குதிரை வண்டியும் வீதிக்கு வந்துள்ளது.
யாழ்பாணத்தை சேர்ந்த அருட் தந்தையர் ஒருவர்,
எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் காணப்படுவதால், குதிரை வண்டியில் தனது பயணத்தை மேற்கொண்டுவருகின்றார்.
குதிரை வண்டியில்...
டளஸ் தலைமையிலான கூட்டணிக்கான ஏற்பாடுகள் தீவிரம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
மொட்டு கட்சிமீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், மாற்று ஏற்பாடாகவும், ...











