வேட்டைக்கு சென்ற தந்தை 17 வயது மகனின் துப்பாக்கி பிரயோகத்தில் பலி!

கேகாலை, தெடிகம பகுதியில் வேட்டைக்கு சென்ற தந்தை, மகனின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

47 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 17 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெடிகம பகுதியில் உள்ள மலைப்பகுதிக்கு தந்தையும் மகனும் வன விலங்குகளை வேட்டையாட சென்றுள்ளனர்.

இதன்போது மகனால் வன விலங்குகளை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம், தவறுதலாக தந்தைமீது பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெடிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles