அம்பலாங்கொடையில் பிரதி அதிபர்மீது துப்பாக்கிச்சூடு

அம்பலாங்கொடை – ரந்தோம்பே பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தர்மாசோக கல்லூரியின் பிரதி அதிபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரதி அதிபர், மோட்டார் சைக்கிளில் இன்று காலை பாடசாலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles