நாட்டில் மது பாவனை 20 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதனால், அரசாங்கத்திற்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பிரச்சினைக்கு மத்தியில் மது பாவனை குறைந்துள்ளது.










