“அலாவுதீனின் அற்புத விளக்குபோன்றே பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகையை ஆளுங்கட்சி பார்க்கின்றது.” – என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதால் ஏற்படவுள்ள மாற்றம் என்ன, அவர் என்ன அலாவுதீனின் அற்புத விளக்குடனா வருகிறார் என எதிரணி உறுப்பினர்கள் விமர்சனம் செய்கின்றனர். எம்மை பொறுத்தவரையில் பஸில் ராஜபக்சவின் வருகையையே நாம் அலாவுதீனின் அற்புத விளக்காகவே பார்க்கின்றோம். அவர் நாடாளுமன்றம் வந்து, அமைச்சு பதவியை ஏற்பது எமக்கு பெரும் பலமாக அமையும். எனவே, பஸிலின் வருகையைத் தடுக்கவே எதிரணி இப்படியெல்லாம் விமர்சனங்களை முன்வைக்கின்றது.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை, பஸில் ராஜபக்ச வருவதால் அரசியலில், பொருளாதாரத்தில் பெரிதாக எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.