ஆறுமுகனின் மறைவோடு காங்கிரஸின் கதை முடிந்துவிட்டதா? ஜீவன் வழங்கியுள்ள பதில்….

அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மறைவோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது என சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் காங்கிரஸ் இன்னமும் பலமாகவே உள்ளது. இதற்கு எமது தற்போதைய அரசியல் வகிபாகமே சிறந்த சான்று என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை உப பிரதேச செயலகம், நோர்வூட் உப பிரதேச செயலகம் என்பன பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய பிரதேச செயலகங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (29.05.2023) நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள், கிராம, சமூர்த்தி, நலன்புரி ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

புதிய பிரதேச செயலகங்களை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

“ஒரு வருடத்துக்கு முன்னர், உப செயலகத்தை திறந்து வைத்தபோது, அதற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பிரதேச செயலகம் கோரும் நிலையில், உப செயலகம் எதற்கு எனவும் கேள்விகள் எழுப்பட்டன.

அப்போது பிரதேச செலயகம் நிச்சயம் உருவாகும் என நாம் பதிலளித்தோம். அதனை இன்று செய்து முடித்துள்ளோம். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும், சொல்வதை செய்வதும்தான் காங்கிரஸின் அரசியல் பலம்.

இராஜங்க அமைச்சு பதவி எமக்கு கிடைத்தபோது, ஆறுமுகன் தொண்டமானின் மறைவோடு காங்கிரஸ் பலவீனமடைந்துவிட்டது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நாம் அமைதி காத்தோம். மறைந்த தலைவர் காட்டிய வழியில் நடந்தோம்.

எமது தவிசாளர் தேசிய சபையில் உள்ளார். தலைவர் கிழக்கு மாகாண ஆளுநராக இருக்கின்றார். நான் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சு பதவியை வகிக்கின்றேன். ஆக இருந்ததைவிடவும் காங்கிரஸ் பலமாகவே உள்ளது.

எமது மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றி வருவோம். அடுத்ததாக பல்கலைக்கழக விவகாரத்தையும் செய்து முடிப்போம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles