ஆற்றில் பாய்ந்து தப்பிச்செல்ல முற்பட்ட கைதியை பிடிப்பதற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவர் ஜா – எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் அழைத்துச்சென்றுள்ளனர்.
பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள ஜா – எல ஆற்றில் சந்தேக நபர் பாய்ந்துள்ளார். ஆற்றில் நீந்தி தப்பிப்பதற்கு முற்பட்டுள்ளார். அவரை பிடிப்பதற்கு பொலிஸாரும் ஆற்றில் இறங்கியுள்ளனர். இதன்போதே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.
கடும் மழையால் ஜா – எல ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால் தேடும் பணி மாலை 5 மணிவரை நிறுத்தப்பட்டது. தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்பாணத்தை சேர்ந்த 26 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே காணாமல்போயுள்ளார்.










