இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று இலங்கை கிரிக்கட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே குறித்த வீரருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், குறித்த வீரருடன் தொடர்பை பேணிய நபர்களை கண்டறியும் நடவடிக்கையில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை அணியின் ஏனைய வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாத காரணத்தினால் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் எவ்வித பாதிப்பும் இல்லையென ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணம் நிறைவடைந்தவுடன் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான லஹிரு குமாரவுக்கு பதிலாக சுரங்க லக்மால் அணிக்குள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.