இலங்கை மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் மறுசீரமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அரசாங்க நிதி பற்றிய குழுவின் நோக்கமாகும்

சர்வதேச நாணய நிதியத்தினால் அறிவிக்கப்பட்டு இலங்கை மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் மறுசீரமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அரசாங்க நிதி பற்றிய குழுவின் நோக்கமாகும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது தவணையைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாக மத்திய வங்கி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தே அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றுவதற்கான பொறிமுறையினை நடைமுறைப்படுத்தும்போது காணப்படும் கடுமையான சமூகத தாக்கங்கள் குறித்தும் அரசாங்க நிதி பற்றிய குழு வினவியது. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு ஏற்படும் சமூகத் தாக்கம் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கையாக இருப்பதாகவும், அந்த விளைவுகளை நிராகரிப்பதற்கு செலவின உச்சவரம்புகள் போன்ற சில பாதுகாப்புக்களைப் பயன்படுத்தியிருப்பதாகவும் மத்திய வங்கி பதிலளித்தது.

வட்டி வீதங்களைக் கட்டுப்படுத்துவதால் சந்தையில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்துக் குழு கேட்டபோது, தற்பொழுது நாட்டில் குறைந்துவரும் அந்நியச் செலாவணி மேலும் குறைவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை மத்திய வங்கி ஏற்றுக்கொண்டது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) மூலம் பண உட்செலுத்தலை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும், வட்டி வீதங்கள் மீண்டும் தளர்த்தப்படலாம் என்றும், சந்தை மீண்டும் விரிவடைவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக்கான மாற்று வழிகள் பற்றிக் கேட்டபோது, சர்வதேச நாணய நிதியத்துடான கூட்டணான்மை விடயம் இறுதிப்படுத்தப்படும்வரை எந்தவொரு சர்வதேச நிறுவனமும் கடன் முகாமைத்துவத்தில் இலங்கையுடன் கூட்டாண்மையை ஏற்படுத்தத் தயாரில்லை என மத்திய வங்கி வலியுறுத்தியது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும் கடன் நடவடிக்கைகளினால் இலங்கையின் நம்பகத்தன்மை குறித்து சர்வதேச முகவர் நிலையங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு எதிர்காலத்தில் கடன்முகாமைத்துவம் உள்ளிட்ட எதிர்கால முயற்சிகளில் பங்காளர்களாக இணையலாம். இதனால்தான் கடன்பிணை விடயத்தில் இலங்கை இணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய வங்கி வலியுறுத்துகிறது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles