இளம் குடும்பப் பெண் பலி: கம்பளையில் சோகம்

வீட்டின் மேல் மாடிக்கு துணிகளை எடுப்பதற்காக சென்றிருந்த இளம் தாயொருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கம்பளை, நாராங்விட்ட பகுதியைச் சேர்ந்த 35 வயதான இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரின் கணவன் வேலைக்கு சென்றுள்ளார், மூத்த மகன் சாதாரண தரப்பரீட்சை எழுதுவதற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இளைய மகன் தந்தைக்கு உணவெடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

மதியம் மழைவந்தபோது, மேல்மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக தாய் சென்றுள்ளார். இதன்போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பரீட்சை எழுத சென்றிருந்த மூத்த மகன், வீடு திரும்பியவேளை தாயை தேடியுள்ளார். இதன்போது தாய் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டுள்ளார். பின்னர் தந்தைக்கும், அயலவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

 

Related Articles

Latest Articles