மஸ்கெலியா, சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட அவரவத்தை பிரிவில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சத்திய மூர்த்தி சுபாஸ் என்ற 22 வயதான ஆட்டோ ஓட்டுநரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலை செய்வதற்கு முன்னர் இவர் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளார். அதில் ஆட்டோவுக்கான 3 மாத தவணைக் கட்டணத்தை செலுத்தாததாலேயே தான் இந்த முடிவை எடுத்தார் என குறிப்பிட்டுள்ளார் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சடலம் பிரதே பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்










