ஈரானுக்கு 4 மாதங்களில் 4.1 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி

” ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், தேயிலை ஏற்றுமதியின் ஊடாக ஈரானுக்குச் செலுத்த வேண்டிய எண்ணெய்க்கான கடனை இலங்கை கடந்த வருடம் ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் செலுத்த ஆரம்பித்துள்ளது.” – என்று இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்தார்.

‘இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

” அந்த உடன்படிக்கையின் கீழ், தேயிலை ஏற்றுமதியின் மூலம் பெற்றோலியத்துக்காக ஈரானுக்குச் செலுத்த வேண்டிய 250.9 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கடனில் இதுவரை 55 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளது.

2024 இன் முதல் 4 மாதங்களில், 4.1 மில்லியன் கிலோ தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது, இது 2023 இன் முதல் 4 மாதங்களில் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.”  – எனவும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

Latest Articles