உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஹெரோயினுடன் கைது!

புத்தளம் நகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஹெரோயினுடன் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் நகர சபை வீடமைப்பு திட்டத்தைச் சேர்ந்த 54 வயதான நபரே
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்படும் போது இவரிடமிருந்து
3 கிராம் 260 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர் மூன்று சந்தர்ப்பங்களில் ஹெரோயின் சம்பந்தமான மூன்று வழக்குகள் தொடர்பாக சிறைத் தண்டனை அனுபவித்தவரென்றும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நபரை இன்று புத்தகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles