‘என் மனைவிதான் காரணம்’ – கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவன் தற்கொலை

திருகோணமலை, நொச்சிக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று(25) அதிகாலை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

ராசதுரை சுதாகரன் (27வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக உயிரிழந்தவரின் மனைவி தனது பிள்ளையுடன் மட்டக்களப்பில் வாழ்ந்து வந்துள்ளார். தொலைபேசியில் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர் தூக்கில் தொங்கி இருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதிலும் குறித்த சடலத்தை திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமி பார்வையிட்டதுடன்,பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

தனது மரணத்துக்கு மனைவியே காரணம் எனவும், அவர் இன்னொருவருடன் கள்ள உறவில் உள்ளார் எனவும் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

Related Articles

Latest Articles