எஸ்.பி.பிக்கு கம்பளையில் புகழஞ்சலி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92 ஜனன தின நிகழ்வும், உலகப்புகழ்பெற்ற பாடகர் ‘பாடும் நிலா’ எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கான புகழஞ்சலியும் கம்பளையில் நேற்று (02.10.2020) நடைபெற்றது.

வர்த்தகர் எஸ். கணேசன் சதீஸின் ஏற்பாட்டில் கம்பளை சபாயரில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்திஜீவிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள், வர்த்தகர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சினிமாத்துறையில் தடம்பதித்த இருவரின் உருவப்படங்களுக்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், புகழுரையும் இடம்பெற்றது.

இசைக்கலைஞர்களின் நிகழ்வும் இடம்பெற்றது

Related Articles

Latest Articles