ஐஸ் போதைப்பொருளுடன் மஸ்கெலியாவில் இருவர் கைது!

கொழும்பு, வத்தளை பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகளாக வருகைதந்த நால்வரிடமிருந்து ஐஸ் போதைபொருள் மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.பண்டார தெரிவித்தார்.
மஸ்கெலியாவில் உள்ள விடுதியொன்றுக்கு முன்னால் வைத்தே நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் இருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்

Related Articles

Latest Articles