சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் மீளாய்வு கலந்துரையாடலின் முதலாவது மீளாய்வின் இறுதி கலந்துரையாடலின் நிமித்தம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், எதிர்க்கட்சி தலைவரை இன்று (25) சந்தித்து கலந்துரையாடினர்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் பொருளாதார, சமூக,
அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய அரசு செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அரசு உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதிய மிகுதியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐ.எம்.எப். பிரதிநிதிகளிடம் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், ,ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மக்களுக்கு சாதகமான உடன்பாட்டை மேற்கொண்டு அதன் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என்றும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி Mr.Peter Breuer (Senior. Mission Chief),Ms.Katya Svirydzenka (Dep. Mission Chief),Dr.Sarwat Jahan (IMF Resident Representative), Ms.Manavee Abeyawickrama – (Local Economist),Lan Huong Vu (Communications Dept.) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம்,பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,வேலுகுமார் மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தனர்.
