ஒரு லட்சம் பேர் பலி! இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம்!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 33 ஆயிரத்தை கடந்தது. இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து 875 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 48 லட்சத்து 36 ஆயிரத்து 28பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 79 லட்சத்து 4 ஆயிரத்து 702பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 325பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடியே 58 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 213,524
பிரேசில் – 145,431
இந்தியா – 100,875
மெக்சிகோ – 78,492
இங்கிலாந்து – 42,268
இத்தாலி – 35,941
பெரு – 32,609
பிரான்ஸ் – 32,155
ஸ்பெயின் – 32,086
ஈரான் – 26,567
கொலம்பியா – 26,397

Related Articles

Latest Articles