கண்டியில் ‘லிப்ட்’ உடைந்து விழுந்ததில் இருவர் பலி!

கண்டி, லெவல்ல பகுதியில் இன்று முற்பகல் தற்காலிக மின் உயர்த்தி ( temporary elevator) உடைந்து விழுந்ததில் இருவர் பலியாகியுள்ளனர்.

குறிப்பிட்ட அளவை விடவும் அதிகமான கட்டுமானப் பொருட்களை ஏற்றிச்சென்றதாலேயே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது.

இதனையடுத்து ஒருவர் சம்பவ இடத்திலும் மற்றையவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்துள்ளனர்.

55 மற்றும் 57 வயதுகளுடைய இருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர். மூன்றாவது மாடியில் இருந்தே அறுந்து விழுந்துள்ளது.

Related Articles

Latest Articles