கண்டி செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த மாதத்தில் மட்டும் கண்டி மாவட்டத்தில் ஹெரோயின் தொடர்பான 564 வழக்குகளும், ஐஸ் போதைப்பொருள் தொடர்பாக 142 வழக்குகளும் , கஞ்சா போதைப் பொருள் தொடர்பாக 1139 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதாகவும் மத்திய பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் மஹிந்த திசாநாயக்கா மேலும் தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த தொடர்ந்து பாடசாலை மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக கண்டி மாவட்டத்தில் மட்டும் 287 பாடசாலைகள் அவதானிக்கப்பட்டு அவர்கள் அறிவுறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இச்செயற்பாடு தொடர்ந்து நடைபெறுமென்றும் அவர் குறிப்பிட்டார்.