கண்டி யாக்க தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு : பாரத் அருள்சாமி

– க.கிஷாந்தன்

நீண்டநாளாக தீர்க்கப்படாதிருந்த பெருந்தோட்ட மக்கள் யாக்க (JEDB) தொழிலாளர் பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு காணப்பட்டது.

கண்டி மாவட்டத்திற்குட்பட்ட ஹந்தான, கலஹா, தெல்தோட்டை மற்றும் நூல்கந்துர ஆகிய தோட்டங்களில் பல வருடங்களாக தீர்வு காணப்படாமலிருந்த பல பிரச்சினைகளுக்கு இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உப செயலாளர் பாரத் அருள்சாமி தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய கண்டி மக்கள் பெருந்தோட்ட யாக்கத்துக்குச் சொந்தமான பல தோட்டங்களில் நிலவிவந்த பல பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு காணப்பட்டது.

குறிப்பாக, தொழிலாளர்களுக்கு வழக்கப்படாதிருந்த ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் அவர்களுக்கான சேவை கால கொடுப்பணவு போன்றவை பல நாள் கிடாப்பில் கிடந்தது.

அத்தோடு, கோவில்களுக்கு வழக்கப்படாதிருந்த பணம், இறந்தவர்களுக்கு வழங்கப்படும் பணம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளும் வழங்கப்படாதிருந்த நிலையில் இன்று பெருந்தோட்ட மக்கள் யாக்க தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்வு காணப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பெருந்தோட்ட மக்கள் யாக்கத்தின் தலைவர் விங் காமெண்டர் அபே சூரிய மற்றும் அதன் கணக்காய்வாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன் போது இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மேலும், ஹந்தான, கலஹா, தெல்தோட்டை, லுல்கந்துர உள்ளிட்ட மக்கள் யாக்கத்திற்கு சொந்தமான அனைத்து பகுதிகளிலும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்குமாறு அங்குள்ள முகாமைத்துவத்திற்கு பணிக்கப்பட்டுள்ளது.

இச் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப செயலாளர் பாரத் அருள்சாமி, தொழிலாளர் காங்கிரஸின் மாநில, பிரந்திய இயக்குனர்கள், தோட்ட தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கண்டி மாவட்டத்தில் அபிவிருத்தி மற்றும் தொழில் பிணக்குகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் நாம் நிறைவேற்றித் தர முன்னிற்போம் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles