கதிர்காம எசல பெரஹரவுக்கு 16ஆவது முறையாகவும் டயலொக் அனுசரணை

கதிர்காம எசல பெரஹரவுக்கு 16 வது முறையாகவும் டயலொக் அனுசரணை வழங்குகின்றது.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு, இந்த ஆண்டும் உருகுணை கதிர்காம எசல பெரஹர சுகாதார அமைச்சகம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்கிய சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை ஜூலை 21 ஆம் திகதி தொடங்கிய கதிர்காம ஆலயத்தின் வருடாந்த பெரஹ ரதிருவிழா ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை பொதுமக்களின் பங்களிப்பு இன்றி நடைபெறும்.

நீண்டகாலமாக வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹரவிற்கு இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசி ஆட்டா 16 வதுமுறையாகவும் தொடர்ந்து தனது பங்களிப்பு வழங்கியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க உருகுணை கதிர்காம ஆலயத்தின் எசல பெரஹர மூன்று முக்கிய பெரஹராக்களைக் உள்ளடக்கும்.

பக்மஹா பெரஹர,எசல பெரஹர,மற்றும் இல்மஹா பெரஹரா ஆகியவை இதில் அடங்கும். கதிர்காம புனிதப்பூமியில் நடைபெறும் பூஜைகள் மற்றும் வருடாந்த மத நிகழ்வுகளில் எசல பெரஹர முக்கிய இடத்தினை வகிக்கின்றது.

பெரஹர தொடங்குவதற்கு முன்னைய நாள்,புனித பூமியில் உள்ள சங்கவாச வளாகத்தின் பிரித் மண்டபத்தில் இரவு முழுவதும் பிரித் சொற்பொழிவு பாரம்பரியமாக நடைபெறும்.

பெரஹர திருவிழாவிற்கு ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும் முகமாக இந்த பிரித் பிரசங்கம் பஸ்நாயக்க நிலமேயின் தலைமையில் நடாத்தப்படும். பெரஹரவின் அனைத்து நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் அனைத்து மக்களுக்கான ஆசிர்வாதங்களை பெறுவதுமே இதன் முக்கிய நோக்கம்.

இந்த பெரஹர கதிர்காம பெருமான் மற்றும் வள்ளி அம்மை ஆகியோரின் திருமணத்தை நினைவு கூறும் முகமாக நடாத்தப்படுகின்றது என முன்னோர்களால் நம்பப்படுகிறது. அதன்படி எசல 2020 ஆம் ஆண்டின் ஜுலை 21 ஆம் திகதி இரவு சுப முகூர்த்தத்தில் ஆரம்பிக்கும் இப்பெரஹர நிகழ்வானது ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க மாணிக்க கங்கையின் ஜீவமாலி நதிக்கறையில் நீர்வெட்டும் விழாவுடன் நிறைவடையும்.

டயலொக் ஆசி ஆட்டாநீண்டகாலமாக இலங்கையின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதுடன் நாட்டின் முக்கிய கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளில் பெரும் பங்களிப்பாளராகவும் இருந்துவருகிறது.

அவற்றுள் கண்டி ஸ்ரீதலதா பெரஹர, களனி துருது மஹாபெரஹர, கங்கராம நவம்மஹாபெரஹர, கட்டபருஎசலமஹாபெரஹர, மற்றும் கோட்டேரா ஜமஹா விகார பெரஹர ஆகியவை அவற்றில் சில.

அத்தோடு பௌத்தாலோக வெசாக்வலையம் மற்றும் கங்காரம விகாரையின் ஸ்ரீபுத்தரஷ்மி வெசாக் வலையம் ஆகியவற்றிற்கும் டயலொக் ஆசி ஆட்டா நிறுவனம் தனது பங்களிப்பினை வழங்கிவருகின்றது. திம்புலாகல ஆச்சிரமத்தின் நுழை வாயிலினை (வாஹல்கட) அமைப்பதற்கும் டயலொக் தனதுபங்களிப்பினை வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles