கபரகலை வீட்டுத்திட்டத்திற்கு பிரதியமைச்சர் பிரதீப் கண்காணிப்பு விஜயம்!

பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றைய தினம்(17) நேரில் சென்று பார்வையிட்டார்.

வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் பிரதீப்,இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

இவ்வீட்டுத் திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற 50 வீடுகளை பயனாளிகளுக்குக் கையளிக்க உள்ளோம். இதனை வருடத்தின் ஆரம்பத்திலேயே பயனாளிகளுக்கு வழங்குவதற்கு உத்தேசித்திருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்ட தித்வா பேரிடர் காரணமாக தாமதம் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் முழுமையான நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படுகின்ற இவ்வீட்டுத் திட்டத்தின் சுற்றுப்புறச் சூழலை அழகுப்படுத்துவதற்குஇலங்கையில் உள்ள சிவில் அமைப்புகள், சமூக நல அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளதோடு அது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 4ஆம் திகதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் அவ் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் நேற்றைய தினம் பூணாகலை கபரகலைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், சிவில் சமூக அமைப்புகளுடனும் பயனாளிகளுடனும் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.

வீடுகளை கையளிக்கும் முன் அதன் சுற்றுப்புறச் சூழலை அழகுபடுத்தி சகல வசதிகளுடன் கூடிய ஓர் அழகிய சூழலில் அம்மக்களைக் குடியமர்த்துவதற்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வந்திருந்தன. அதனடிப்படையில் பூந்தோட்டங்கள், நூலகம், வீடுகளுக்கான முகவரி பெயர் பலகைகள் என்பன சிவில் சமூக அமைப்புகளால் மேற்கொள்ள இருப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டாரவின்
கள ஆய்வு உத்தியோகஸ்தர் மகேந்திரன், பூணாகலை தொகுதியின் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், கட்டுமான பணியினை மேற்கொள்கின்ற இராணுவத்தின் கேர்னல் உட்பட இராணுவ அதிகாரிகள் பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் வசந்தமூர்த்தி ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles