குடும்ப தகராறு – குழந்தைகளை பாலத்தில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்த தாய்

கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால், இரு பிள்ளைகளையும், காலி – பெந்தர பாலத்துக்கருகில் விட்டுவிட்டு, ஆற்றில் குதித்த பெண்ணொருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

பலாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் குறித்த பெண் எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்தி பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் இன்று முற்பகல், 9 வயது மகனையும், ஒன்றரை வயது மகளையும் பாலத்துக்கு அருகில் நிறுத்திவைத்துவிட்டு, 40 அடி உயரத்தில் இருந்து ஆற்றுக்குள் பாய்ந்துள்ளார்.

நீரில் அடித்துச்செல்லப்பட்ட அவர், இளைஞர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த பெண் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பிள்ளைகள் பொலிஸாரின் பாதுகாப்பின்கீழ் உள்ளனர்.

Related Articles

Latest Articles