குளவிக்கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண்ணொருவர் பலியாகியுள்ளார். புசல்லாவை, சோகம தோட்டம் நடுகணக்கு பகுதியிலேயே இன்று மாலை இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் புசல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
” ஒரு குளவியே இவரை கொட்டியுள்ளது. எனவும், வலி தாங்காமல் ஓடிவரும்வேளையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்” என பிரதேச வாசியொருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண்ணின் வயது 67 ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டார். பிரேத பரிசோதனை இன்னும் நடக்கவில்லை.
க.யோகா










