இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ராகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் வீட்டில் இருந்தவேளையிலேயே உயிரிழந்துள்ளார். ராகம வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையின்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் மாத்திரம் 21 மரணங்கள் பதிவாகியுள்ளன.