கொழும்பில் 13 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கம்!

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நான்கு பொலிஸ் பிரிவுகளுக்கான கட்டுப்பாடுகள் நாளை (23) காலை 5 மணி முதல் தளர்த்தப்படவுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

பொரள்ளை, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை மற்றும் கொம்பனிவீதி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் இவ்வாறு தளர்த்தப்படவுள்ளன.

எனினும், பொரள்ளை பொலிஸ் பிரிவின் வனாதமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கொம்பனிவீதி பொலிஸ் பிரிவின் சகந்த கிராம உத்தியோக்தர் பிரிவும் மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் உரை தனிமைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் கீழ்வரும் பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்.

1.மட்டக்குளிய

2.மோதரை

3.ப்ளூமண்டல்

4.கொட்டாஞ்சேனை

5.கிராண்ட்பாஸ்

6.கரையோரப்பகுதி

7.ஆட்டுப்பட்டித்தெரு

8.மாளிகாவத்தை

9.தெமட்டகொடை

10.வாழைத்தோட்டம்

11.மருதானை

12.புறக்கோட்டை

13.வெல்லவீதி

Related Articles

Latest Articles