‘கோ ஹோம் கோட்டா’ – தொடர் போராட்டத்துக்கு தயாராகிறது சஜித் அணி

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஒரு வார காலம் தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இன்றிலிருந்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்று, ஜனாதிபதியை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles