சஜித், அநுர போட்டியால் ரணிலுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்முனைப் போட்டி நிலவும் எனவும், அதில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவதை எவராலும் தடுக்க முடியாது எனவும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“அடுத்த தேர்தலில் களமிறங்கவுள்ளதாக சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அறிவித்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவும் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தேசிய வேட்பாளராக போட்டியிடுவார்.

இவர்கள் மூவருமே பிரதான வேட்பாளர்கள், இவ்வாறு ஜனாதிபதி தேர்தலின்போது மும்முனை போட்டி நிலவும் என்பதால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறும். இதுவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெற்றிவாய்ப்பாக அமையும். எனவே, ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது.” – என்றார்.

 

Related Articles

Latest Articles