சிறிதரன் எம்.பியின் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம் – மகன்மீதும் தாக்குதல்!

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஜானம் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. குறித்த தாக்குதல் வீடியோ காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் சாரங்கன் மீது இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அண்மையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8பேர் கொண்ட குழு பாராளுமன்ற உறுப்பினரின் மகன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதோடு, மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles