இலங்கை குரங்குகளை சீனாவுக்கு கொண்டு சென்று இறைச்சிக்காக பயன்படுத்தபோகின்றனர் என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
” சீனாவிலுள்ள மிருககாட்சிசாலைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலேயே சீனாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
” இலங்கையிலுள்ள குரங்கொன்றை பிடிப்பது முதல், அதனை சீனாவிற்கு கொண்டு செல்வது வரையான அனைத்து செலவீனங்களையும் சீனாவே ஏற்றுக்கொள்கின்றது.” எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
” நாட்டிற்குள் குரங்கொன்றை பிடிப்பதற்காக மாத்திரம் சுமார் 5 ஆயிரம் ரூபா, சீனாவினால் செலவிடப்படவுள்ளது.
அத்துடன், குரங்குகளை பிடித்து, அதனை தனிமைப்படுத்தி, நோய்கள் ஏதேனும் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து, கூடுகளில் அடைத்து, சீனாவிற்கு கொண்டு செல்வதற்கான முழு செலவினத்தையும் சீனாவே ஏற்றுக்கொள்ளும் எனவும்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
” இலங்கை குரங்கொன்றிற்காக சுமார் 30,000 முதல் 50,000 ரூபா வரை சீனா செலவிட எதிர்பார்த்துள்ளது.
இலங்கையிலிருந்து கொண்டு செல்லும் குரங்கிற்கு 50,000 ரூபா வரை செலவிடும் சீனா, அந்த குரங்கை இறைச்சிக்காக பயன்படுத்துமாயின், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் வைத்து ஒரு லட்சம் ரூபாயாக விற்க வேண்டும்.
அதே சமயம் ஒரு லட்சம் ரூபாவை செலவிட்டு, குரங்குகளை சீனர்கள் உட்கொள்ளமாட்டார்கள்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.










