கொழும்பு உட்பட நாட்டில் 14 மாவட்டங்களில் நிலவும் அடை மழை, கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையால் 2, 641 குடும்பங்களைச் சேர்ந்த 9,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
19 பேர் காயமடைந்துள்ளனர். மரம் முறிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 6 வீடுகள் முழுமையாகவும், 2,576 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.