இலங்கையின் நட்சத்திர தடகள வீராங்கனையும், 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான சுசந்திகா ஜயசிங்க தனது இரு குழந்தைகள் சகிதம் ஆஸ்திரேலியா, மெல்பேர்ண் நகரில் குடியேறத் திட்டமிட்டுள்ளார்.
சுசந்திகா ஜயசிங்க இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள நிலையில், நாடு திரும்புவது குறித்து நிச்சயமற்ற நிலையில் இருக்கின்றார் என அறியமுடிகின்றது.
இது தொடர்பில் தனது நண்பர்களுக்கு சுசந்திகா தெரியப்படுத்தியுள்ளார் என தெரியவருகின்றது.
சுசந்திக்காவின் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக்கொண்டே அவர் மெல்பேர்ணில் குடியேறத் திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இலங்கையின் பிரபலமான தடகள வீராங்கனையும், ஆசியப் பதக்கம் வென்றவரும், ஒலிம்பியனுமான தமயந்தி தர்ஷாவும் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.