ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கைவிளக்க உரை தொடர்பில் பாராளுமன்றத்தில் நாளை விவாதம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், எதிரணி உறுப்பினர்களுக்கு விவாதத்தில் உரையாற்றுவதற்கு 40 வீத நேர ஒதுக்கீடே வழங்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று மாலை 3 மணிக்கு பாராளுமன்றத்தில் கொள்ளை விளக்க உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.