ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் புதன்கிழமை (11) ஜேர்மனிக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட குழுவினரும் இவ்விஜயத்தில் பங்கேற்கின்றனர்.
இவ்விஜயத்தின் போது ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் உட்பட அந்நாட்டின் முக்கிய அரச தலைவர்கள் மற்றும் ஜேர்மன் வாழ் இலங்கை சமூகத்தினரை சந்தித்து ஜனாதிபதி அநுர கலந்துரயாடவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.