இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (23) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.
இந்திய பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாகவே அவர் இலங்கை வருகின்றார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா பேருதவிகளை வழங்கிவருகின்றது.
இந்நிலையில் அடுத்தக்கட்ட உதவி திட்டங்கள் பற்றிய அறிவிப்பை இவ்வியத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.










