ஜனாதிபதி நிதியத்தில் நிதி உதவி பெற்ற மேலும் பல அரசியல்வாதிகள்: பெயர் பட்டியல் விரைவில் வெளியாகும்!

ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி உதவிபெற்ற ஏனைய அரசியல்வாதிகளின் பெயர்,விவரங்களும் வெளியிடப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரை நிதிகளை பெற்ற ஒரு சில அரசியல்வாதிகளின் பெயர்களைதான் நான் வெளியிட்டிருந்தேன். மற்றுமொரு பெயர் பட்டியலும் கைவசம் உள்ளது.

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி உதவி பெற்ற பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்கள் விவரங்களும் உள்ளன. அந்த விவரங்களும் வெளியிடப்படும்.

ஜனாதிபதி செலயகத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் 2005 இற்கு முன்னரான காலப்பகுதியையும் வெளியிட எதிர்பார்க்கின்றோம். சிஐடியில் மட்டுமல்ல ஜனாதிபதி செயலகத்திலும் அவ்வளவு எளிதில் ஆவணங்களை தேட முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles