‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றும் சதி’ – கோட்டாவின் நூல் நாளை வெளியீடு!

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்தே சில  சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகள் தன்னை  ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு நேரம் பார்த்து காத்திருந்ததாக  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றும் சதி’ என்ற பெயரில் நாளை (07) வெளியிடப்படவுள்ள தனது நூலில்  இந்த உண்மைகளை வெளிக்கொணரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரமடைந்து முதல் 60 வருடங்களுக்குள் ஒருபோதும் அனுபவித்திராத வகையில், இன்று நாட்டிற்குள் சர்வதேச தலையீடுகள் காணப்படுவதாகவும் உள்ளக அரசியலை வௌித்தரப்பினர்  கையாள்வதாகவும்  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து தன்னை அகற்றும் அரசியல் இயக்கம்,  சுதந்திரம் கிடைக்கப்பெற்ற பின்னர் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அமைதியான அதிகாரப் பரிமாற்றங்களை மாத்திரம் அனுபவித்திருந்த இலங்கை அரசியலுக்கு புதிய பரிமாணத்தை இணைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் இந்நாட்டின் அரசியல் எதிர்காலத்திற்கு பாரிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் விடயம் என கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சர்வதேச அனுசரணையுடன் ஆட்சியை  மாற்றும் செயற்றிட்டம் தொடர்பிலான நேரடி அனுபவமே நாளை (07) வௌியிடப்படவுள்ள தனது நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles