” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரனின் அறிவிப்புகள் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.”- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இராஜங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அரச வீட்டில் இருக்கிறார். அரச வாகனங்களை பயன்படுத்துகின்றார். வரப்பிரதாசங்களை அனுபவிக்கின்றார். ஆனாலும் அரசை விமர்சிக்கிறார். அவர் அப்படிதான். அது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை.”- என்றும் சாகர காரியவசம் தெரிவித்தார்.