தலைமன்னார் – கொழும்பு இடையில் சொகுசு ரயில் சேவை விரைவில்!

தலைமன்னார் துறைமுகத்திற்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் தலைமன்னார் துறைமுக ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு 10.34 மணிக்கு கோட்டை நிலையத்தை அடைந்து மாலை 3.35 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு இரவு 10.48 மணிக்கு தலைமன்னார் துறைமுகத்தை சென்றடையுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

இந்த ரயிலில் குளிரூட்டப்பட்ட இரண்டு முதல் வகுப்பு பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை பெட்டிகள் மற்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு சாதாரண பெட்டிகள் உள்ளதாக தெரிவித்தார்.

Related Articles

Latest Articles