இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படவுள்ளார்.
தலைமைப்பதவிக்கு போட்டி எதுவும் நிலவாதெனவும், செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவுசெய்யப்படவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை நாளை கூடவுள்ளது. இதன்போது புதிய தலைவர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.
தலைமைப்பதவிக்கு ஆரம்பத்தில் இருமுனை போட்டி நிலவிவந்தாலும் செந்தில் தொண்டமானுக்கான ஆதரவு வலுத்ததால், அப்பதவிக்கு போட்டியிடுவதில்லை என மற்றைய தரப்பு தீர்மானித்துள்ளது.
ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட கூட்டமொன்று தற்போது இடம்பெற்றுவருகின்றது. இதன்போது உறுப்பினர் தேர்வு சம்பந்தமான பட்டியலில் இறுதிபடுத்தப்படக்கூடும் என தெரியவருகின்றது.










