இலங்கையின் முன்னணி மருந்தக வலைப்பின்னலைக் கொண்டுள்ள Healthguard நிறுவனம், தேசிய மருந்தகங்களுக்கு இடையில் பாதுகாப்பான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக தேசிய ஒளடத ஆணைக்குழுவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.
அதன்படி, தற்போதைய நிலைமையை மேலும் உயர்ந்த தரத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கும் முகமாக சுகாதார பாதுகாப்பு முறையில் மருந்துகளை விநியோகிப்பதை மேலும் மேம்படுத்துவதற்கு வேண்டிய ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பலவற்றை ஆரம்பிப்பதற்கு Healthguard தயாராகி வருவதுடன், அந்த நடவடிக்கைகள் தேசிய ஒளடத ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்ட ‘Guidelines on Good Pharmacy Practice (GPP) ஆவணத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, Healthguard மூலம் ‘Healthguard Cares’ அறிமுகப்படுத்தியதுடன், அதனூடாக உள்நாட்டு மருந்தக சமூதாயத்திற்குள் தமது வாடிக்கையாளர்களின் தேவைகளை சரியான விதத்தில் புரிந்து கொண்டு அவர்களுக்கான மருந்துகள் தொடர்பில் சிறந்த அறிவினைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் சுகாதார பாதுகாப்பான மருந்துகளை விநியோகித்தல், பொறுப்புள்ள மருந்தங்கள் மற்றும் மருந்தாளர்களை உருவாக்குவது தொடர்பான நீண்டகால நோக்கத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளது.
அதன்படி, எப்போதும் மருந்து சீட்டை மருந்தாளருக்கு வழங்கும் முக்கியத்துவம், மருந்துகளை வழங்குவதற்கு உரிய பரிந்துரைகளைப் போன்றே மருந்துகளை பாதுகாப்பாக பெற்றுக் கொடுப்பதற்கான முக்கியத்துவம் குறித்து தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவினைப் பெற்றுக் கொடுக்க ஹெல்த்கார்ட் எதிர்பார்த்துள்ளது.
ஒக்டோபர் மாதம் முழுவதும் ஹெல்த்கார்டினால் ளுழஉயைட ஆநனயை Pடயவகழசஅள ஊடாகவும் மற்றும் கொழும்பு மாவாட்டம் முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள அவர்களது மருந்தகங்களின் ஊடாக மேலே குறிப்பிடப்பட்ட தொனிப்பொருள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், தேசிய ஒளடத ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் Healthguard Cares நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், தமது மருந்தாளர்களின் அறிவு மற்றும் பயிற்சிகளை மேம்படுத்துவதற்காக, முறையாகவும் மற்றும் சுகாதார பாதுகாப்பான மருந்துகளை தயாரிக்கும் நடவடிக்கைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. Healthguardஇன் நோக்கமானது மருந்தாளர் ஒருவரின் கடமையும் அதன் பொறுப்பையும் மேம்படுத்துவதே ஆகும்.
‘Healthguard Cares’ தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய ஒளடத ஆணைக்குழுவின் பிரதான உணவு மற்றும் மருந்து பரிசோதகர் அமித் பெரேரா, Healthguard போன்ற முன்னணி வரிசையிலுள்ள மருந்து விநியோக நிறுவனம், சரியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் மருந்துகளை பெற்றுக் கொள்ளும் முக்கியத்துவம் குறித்து நோயாளர்களுக்கு அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமென தெரிவித்துள்ளார்.
‘ஹெல்த்கார்ட் போன்ற முன்னணியிலுள்ள நிறுவனம் ஒன்று மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு வைத்தியரின் பரிந்துரைகளுக்காக மருந்துச் சீட்டுகளை வழங்கும் முக்கியத்தும் மற்றும் மருந்துகளைப் பெற்றுக் கொள்கையில் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து நோயாளர்களுக்கு அறிவுறுத்துதல் மிகவும் முக்கியமானதாகும். அத்துடன், மருந்தாளர்களுக்கு சரியான மருந்துகள், உரிய ஆலோசனைகளுடன் நோயாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான தீர்மானம் மிக்க சேவையை வழங்குவதனால், அவர்களது அறிவு மற்றும் தகைமையை மேம்படுத்துவதற்கு பாராட்டத்தக்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அதன்படி, நாட்டிலுள்ள பொதுமக்கள் மற்றும் நோயாளர்களுக்கு பாதுகாப்பான, சிறந்த தரத்திலான, மருந்துகளை வழங்குவதற்காக தேசிய ஒளடத ஆணைக்குழுவின் நோக்கத்திற்கு சமாந்திரமாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.’
ஹெல்த்கார்ட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி இன்ஃபியாஸ் அலி கருத்து தெரிவிக்கையில், ‘மருந்தாளர்கள் அவர்களது விரிவான அறிவினை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அவர்களது மருந்துகளில் உச்ச அளவில் நன்மைகளை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துகிறது. ஹெல்த்கார்ட்டிலுள்ள, எமது மருந்தாளர்கள் அனைவரும் வாடிக்கையாளர்களுக்காக மருந்துகளை பாதுகாப்பாக விநியோகிப்பதை உறுதிப்படுத்துதல், பாதுகாப்பான வழிநடத்தல்களை பின்பற்றுதல் மேம்படுத்தல் மற்றும் மேலும் பல விடயங்கள் குறித்து பூரண பயிற்சியும் பெறுகின்றனர். என்றுமில்லாத வகையில், மருந்தாளர் ஒருவருக்கு நோயாளர் ஒருவர் மருந்தொன்றை பயன்படுத்தும் போது அதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாத வகையில் கையாழ வேண்டும். ஹெல்த்கார்ட் கெயார்ஸ் ஊடாக, தேசிய ஒளடத ஆணைக்குழுவின் பாதுகாப்பு மருந்து விநியோக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, மருந்துச் சீட்டு நிர்வகிப்பின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்துதல் மற்றும் அதைச் சுற்றி தீவிர உரையாடலை உருவாக்குவதற்காகவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.’ என தெரிவித்தார்.