கொத்மலை பிரதேசசபைக்குட்பட்ட எல்பொட வடக்கு (காச்சாமலை) தோட்ட மக்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (16) முதல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேற்படி தோட்டத்தில் பல வருடங்களாக இயங்கிவந்த தேயிலை தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை மீள திறக்குமாறு வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தோட்ட நிர்வாகத்தின் சூழ்ச்சி நடவடிக்கையே இதுவெனவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து எல்பொட வடக்கு , எல்பொட நடுப்பிரிவு, எல்பொட கீழ்ப்பிரிவு,மேமலை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் : நீலமேகம் பிரசாந்த்