நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று ஆரம்பம்!

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் சஜித் ராஜபக்ச தலைமையில் கூடவுள்ளது.
ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கை முடிவடைந்த பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் நடைபெறும்.

மறுநாள் 20 ஆம் திகதியும் விவாதம் நடைபெற்று அன்று மாலை 4.30 மணிக்கு பிரேரணைமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

பிரேரணையை தோற்கடிப்பதற்குரிய பெரும்பான்மைபலம் அரச வசம் இருக்கின்றது என்று மொட்டு கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், சபாநாயகர்மீது நாடாளுமன்றத்துக்கு நம்பிக்கையில்லை என்பதையும், அவர் அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களைமீறி செயற்படுகின்றார் என்பதையும் மக்களுக்கு எடுத்துக்காட்டுவதே இதன் நோக்கம் என எதிரணிகள் தெரிவித்துள்ளன.

Related Articles

Latest Articles