நாவலப்பிட்டியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

நாவலப்பிட்டி – கெட்டபுலா பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கம்பளை – மொரகொல்ல பகுதியில் மகாவலி ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெட்டபுலா தோட்டத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை உறவினர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கம்பளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி – புதுக்காட்டிலிருந்து அக்கரவத்தை பகுதியை ஊடறுத்து செல்லும் மகாவலி ஆற்றின் கிளை ஆற்றை கடப்பதற்காக முற்பட்ட மூவர் கடந்த இரண்டாம் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்தமையால் பாலத்தை மேவி 3 அடிவரை நீர்மட்டம் காணப்பட்டதை அடுத்து கயிற்றின் உதவியுடன் 8 பேர் பாலத்தை கடக்க முயற்சித்தனர்.

அதிகரித்த நீர் பிரவாகத்தினால் மூன்று பேர் ஆற்று நீரில் அள்ளுண்டு சென்றனர்.

அக்கரவத்தை பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான 45 வயதான ஜெயராம் ஜெயலட்சுமி, 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதான சத்தியசீலன், 3 பிள்ளைகளின் தந்தையான 35 வயதான சந்திரமோகன் சுரேஷ் ஆகியோரே நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இவர்களில் 45 வயதான ஜெயராம் ஜெயலட்சுமியின் சடலம் நேற்று(14) மாலை கம்பளை மொரகொல்ல பகுதியில் மீட்கப்பட்டது.

இதனிடையே, 49 வயதான சத்தியசீலனின் சடலம் கடந்த 11ஆம் திகதி கம்பளை மொரகொல்ல பகுதியிலேயே மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட 35 வயதான சந்திரமோகன் சுரேஷ் என்பவர் தொடர்ந்தும் தேடப்படுவதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles