நீரோடையில் மிதந்து வந்த பிரசவமான ஒரு தினத்தைக் கொண்ட பெண் சிசுவொன்றின் சடலத்தை, வெலிமடைப் பொலிசார் இன்று (15) மீட்டுள்ளனர்.
வெலிமடைப் பகுதியின் வக்கடஹின்ன நீரோடையிலேயே, மேற்படி சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.
இவ்வக்கட ஹின்ன நீரோடை நுவரெலியா எல்லையிலிருந்து ஆரம்பித்து, வெலிமடைப் பகுதியின் உமா ஓயா ஆற்றில் சங்கமமாகின்றதென்பதும் குறிப்பிடத்தக்கது.
இறந்த சிசுவின் தாயைத் தேடி பொலிசார் தேடுதல் செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாகவும், விரைவில், சிசுவின் தாயைக் கண்டுபிடித்து கைது செய்ய முடியுமென்று, வெலிமடைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எய்ச்.எம். ஹேரத் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட சிசு, கதகதப்பான உடையிலும் பொலிதினினாலும் சுற்றப்பட்ட நிலையிலிருந்ததாகவும், கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்துமே, மீட்கப்பட்டதாகுமென்றும் பொலிசார் தெரிவித்தனர்.
எம். செல்வராஜா, பதுளை.










