நுவரெலியாவில் மேலும் 205 பேருக்கு கொரோனா – இதுவரை 4,089 பேர் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மேலும் 205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பொகவந்தலா, டிக்கோயா, திம்புள்ள பத்தன, கந்தபளை, கொத்மலை, மஸ்கெலியா, நானுஓயா, நுவரெலியா, பூண்டுலோயா, ராகலை மற்றும் தலவாக்கலை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருந்தே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 89 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles