கடந்த மே மாதம் 09 ஆம் திகதி அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டை சேதப்படுத்தியமை தொடர்பில் நெதலகமுவே தம்மதின்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான தேரரை கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
