நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த மூலிகை டீ! எப்படி தயாரிப்பது ?

சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இன்று இந்த டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்:
  • இஞ்சி – 1 கப்
  • கிராம்பு, பட்டை – 10
  • அன்னாசிப்பூ -5
  • ஏலக்காய் – 5 கிராம்
  • துளசி – ஒரு கைப்பிடி
  • மிளகு – 5 கிராம்
  • அதிமதுரம் – 2 ஸ்பூன் அளவு
  • அஸ்வகந்தா – 1/4 ஸ்பூன்

 

செய்முறை
  • இஞ்சியை தோல் சீவி தண்ணீரில் நன்றாக அலசி கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • பிறகு அதை வெயிலில் தண்ணீர் உலரும் வரை காய வைக்கவும்.
  • துளசியை தண்ணீரில் அலசி அதையும் நன்றாக வெயிலில் உலர விட வேண்டும்.
  • பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் மிளகு மற்றும் ஏலக்காயை வறுத்து கொள்ளவும்.
  • அடுத்து அதில் வெயிலில் உலர்ந்த இஞ்சி, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ ஆகிவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.
  • வறுத்த கலவையை ஆறவைத்து மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
  • பிறகு அரைத்த பொடியில் அதிமதுரம் மற்றும் அஸ்வகந்தா பொடியை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  • இதை தினமும் காலையில் குடிக்கும் தேநீரில் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் உடலுக்கு எந்த வித நோயும் அண்டாது.

Related Articles

Latest Articles